தமிழ்த்தேர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ்த்தேர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, டிசம்பர் 25, 2009

இசையும் பாடலும்


இசை
ஜீவன்களை
இணங்க வைத்து
அசைக்க வைக்கும் ஆதி
குன் என்ற ஓசையில்தான்
இந்த
உலகத்தின் ஜோதி.

ஓசையில்தான்
மனிதனுக்கு பிறந்தது ஆசை
ஆசையினால்
மனிதன் மறந்துபோனான்
தன் சுய ஓசை.

"ஹு" என்ற ஓசையின் முடிவே
"ஓம்" என்ற நாதம்
சுரங்களை சுரக்க வைக்கும்
இவைகளில்
இல்லை பேதம்.

பிறப்பு இசைத்தால்
தாயிக்கு ஆதாரம்
பூக்கள் இசைத்தால்
தேனுன்னிகளுக்கு ஆகாரம்
பூகம்பம் இசைத்தால்
மனிதனுக்கு சேதாரம்.

காற்றின் இசையை யாரும்
கற்றுக் கொள்வதில்லை
கடலின்இசையை நாம்
கவனிப்பதில்லை
இயற்கையின் இசையை
நாம் இயற்றுவதில்லை
பசியின் இசையை நாம்
உணர்வதில்லை

இசை
மனிதனை வாழச் செய்கிறது
மனிதனுக்குள் வாழவும் செய்கிறது.!

ஞாயிறு, நவம்பர் 15, 2009

நாம் விடையா வினாவா…?



தன்னை அறிய நாடியது
விடை
பிரபஞ்சமானது
வினா…

வினாவும்
விடையும்
வேறு வேறு
கோணங்களல்ல
கடலும் அலையும்போல
தங்கமும் நகையும்போல…

விடைகளைத்தேடி
பயணிக்கிறோம்
நாம்
வினாக்களல்ல…

விடைகளால்
தடுக்கப்படுபவைகள்
வினாக்களால்
உடைக்கப்படுகிறது…

தேர்வு
விடைகளுக்கல்ல
வினாக்களுக்கு…

விழுந்தது
விடையானதால்தான்
நியூட்டன்
வினாவானான்…

இருளும் ஒளியும்
விடையானதால்தான்
எடிசன்
வினாவானான்…

அறியப்படுவதெல்லாம்
விடைகளல்ல
ஆனால்
அனுபவிக்கப்படுதெல்லாம்
வினாக்கள்…

வாழ்க்கை
விடையாகத்தான் இருக்கிறது
பலருக்கு
வினாக்கள் தெரியவில்லை

விடைத்தேடும்
விடைகள்
வினாக்கள் ஆவதில்லை
வீணாகிக் கொண்டிருக்கிறது…

விடை
மர்மமல்ல
வினாத்தான்
கர்மமாக இருக்கிறது…

நாம் யார் என்று
வினாவைக் கேளுங்கள்
நாம் என்றே
விடைக் கொடுக்கும்…

அதனால் சொல்கிறேன்
நாம் வினாக்கள் அல்ல
விடைகள்…!

திங்கள், அக்டோபர் 12, 2009

பணமா..? குணமா...?


பணம்
மனிதனை மனிதனிலிருந்து
மாற்றி விடும்
குணம்

இதைத்தேடுவதில்
தன்னை
தொலைத்துக் கொள்ளும்
மனித இனம்

கேட்டதும்
கொடுக்கவில்லையெனில்
உறவுக்குள் ஏற்படும்
சினம்

வழிபாடுகள்
வேறுபட்டாலும்
கொடுக்கல் வாங்கலில்
உடன்படும்
மனம்

வெட்டிக் கொள்வதும்
கட்டிக்கொள்வதும்
பணத்தினால் ஏற்படும்
மனஊனம்

செத்தும் கொடுத்தவர்களும்
சொத்தையே கொடுத்தவர்களும்
பலரின் வாழ்க்கைக்கு
பாலம்

குணம் மிகைத்தவர்கள்
இனம் வகையில்லாமல்
என்றும் கொடுப்பார்கள்
தானம்

கொடுப்பதற்கு இருந்தும்
பறிப்பதற்கு பாயும்
பணப்பிச்சனின் உள்ளம்
சாணம்

பணம்தான் வாழ்க்கை
என்பவர்களிடம்
இல்லை குணம்
அவர்களிடம் இருக்கும் உயிர்
என்றும் பிணம்…!

ஞாயிறு, செப்டம்பர் 06, 2009

உறவும் பிரிவும்


பஞ்சபூதங்களின்
அஞ்சுகைகள் தான்
படைத்தோனின் உறவுகள்…

படைத்தவனை தேடுவதற்கு
உறவுகளை பிரியும் துறவுகள்…

ஆதம் ஹவ்வா
ஆதி மனித உறவுகள்…

தடைச் செய்யப்பட்ட
சொர்க்கத்து கனியை
விடைத் தேடாமல்
சுவைத்ததால்
ஏக உறவில் ஏற்பட்டது
பிரிவுகள்…

நாம் என்ற முழுமை
உறவுகளுக்கு கொடுப்பது
உயிர்கள்…
ஆனால்

நான் என்ற சுயமை
மனதில்
களைகளாய் வளர்ப்பது
பிரிவுகள்…

எதிர்பார்ப்புகளின்
ஏக்கமே
உறவுபிரிவின்
தாக்கம்…

உயிர் பிரிந்தால்
மனம் அடைவது துக்கம்…

ஆனால்
உறவு பிரிந்தால்
உள்ளம் பெறுவது கலக்கம்

வாழ்க்கை வாகனத்தில்
பிரிவு இல்லையெனில்
உறவும் இல்லை…

ஆனால்
ஏக உள்ளமையில்
உறவு என்பதும்
பிரிவு என்பதும்
இல்லவே இல்லை…!

புதன், ஆகஸ்ட் 26, 2009

சாரல்


பெய்துக் கொண்டிருக்கிறது
சிலர் நனைகின்றோம்
பலர் நகர்கின்றோம்
எல்லையில்லாத்
தேவைகளைக் கூட்டியதால்
தேடலில் தொலைகின்றோம்...

தன்னிடம் கிடைப்பதை
விட்டுவிட்டு
தானையமாய் திரிவதில்
நாம் தீவிரவாதிகள்...

சுயநலம் என்பது
நமக்கு
மற்றவர்களோடு அல்ல
நம்மிடமே...

அனைத்தையும்
ஆசைக்கு அடகுவைத்து விட்டு
அந்த அனைத்திலும்
தன்னை மீட்க தவறுகிறோம்...

சின்ன சின்ன அறிவுகளில்
சிறைப்படும் நம்மால்
சம்பூரண அறிவுப்பெற்று
விடுதலையாகத்
தெரியவில்லை
பெய்வது
ஞானமழை
சாரலுக்கு தேவையில்லை
குடை...!

புதன், ஆகஸ்ட் 05, 2009

உறவுகள்


இல்லாமையிலிருந்து
உருவானது
இருப்பின் உறவு...

இருப்பிலிருந்து
உதயமானது
படைப்பின் உறவு...

படைப்பில்
பயணமானது
உயிரினங்களின் உறவு...

உயிரினங்களில்
உதயமானது
தாய்மையின் உறவு...

தாய்மையில் தகுதியானது
கல்வியின் உறவு...

கல்வியில்
கரைச் சேர்ப்பது
குருவின் உறவு...

குருவைக் காண்பது
தேடலின் உறவு...

தேடலில் கிடைப்பது
தெளிவின் உறவு...

தெளிவில் தெரிவது
அறிவின் உறவு...

அறிவு உணர்த்துவது
சாந்தியின் உறவு...

சாந்தி சந்தித்தது
சமாதான உறவு...

சமாதானம்
சங்கமித்தது
ஆன்மாவின் உறவு...

ஆன்மா அமைந்தது
இறையின் உறவு...

இறை நிறைந்தது
இருப்பிலும்
இல்லாமையிலும் உறவு...!

வியாழன், ஜூலை 16, 2009

கோடையும் வாடையும்




கோடையும் வாடையும்
வாழ்க்கை பயணத்தின் ஆடை
வடகாற்று வாசனையில்
நம்மனம் தேடுவது ஒடை …

கோடைக்கால மேகத்தில்
ஜாடைத் தேடும் நம்கண்கள்
வாடைகாற்று வீச்சத்தில்
வாடிவிடும் குடும்பபெண்கள்…

ஏழைகளின் வாழ்க்கையில்
என்றுமே வரட்சியான கோடை
ஆனால்
ஏந்தலர்கள் எத்தனித்தால்
ஏழ்மை
பெற்றிடும் கொடை

பாலைவன மனிதர்களுக்கு
வீசும்
பாசத்தின் வாடை
சோலையாகும் வாழ்க்கைக்கு
இவைகள்
என்றுமே இல்லை தடை

உஷ்னத்தில் உருவாகுவது
உயிர்களின் ஊட்டம்
ஆனால்
உக்கிரத்தில் உருகுலைவது
மனித உறவின் ஆட்டம் …

புறத்தேடலில் வீழ்பவனுக்கு
வசந்த காலமும் கோடைதான்
ஆனால்
அகத்தேடலில் முழ்கியவனுக்கு
எக்காலமும் வாடைதான் …

செவ்வாய், ஜூலை 07, 2009

பூர்வீகம்

பிறந்த ஊரும்
வளர்ந்த நாடும்
வாழ்பவர்களுக்கு
பூர்வீகம் என்று
பூரிப்பு

புறப்பட்ட இடத்தை
புரிந்துணர பலருக்கு
புரியாத புதிர்

புகலை தான்னென்று
புகழ்ச்சிக் கொள்வதால்
பூரணம் நமக்கு
புதையல்
உலகறிவு உரியவருக்கு
பொருள் கொடுக்கும்
ஆன்மறிவு அனைவருக்கும்
அமைதிக் கொடுக்கும்

பூர்வீகத் தேட்டம்
நம்மிடம்
புரட்சி செய்தால்
புத்தி பூகம் விலக்கும்

பின்நோக்கி
புலன்
பின் தொடர்ந்தால்
முன்நோக்கி
பூர்வீகம்
முக்தித் தரும்

தாயின் கருவரையில்
உருவானோம்
தந்தையின் உதிரத்தில்
அருவானோம்
உணவுப்பொருட்களில்
கருவானோம்
பஞ்சபூதங்களில்
கலவையானோம்
சூத்திரத்தின்
சூக்குமம்மானோம்
சூக்குமத்தில்
சூனியமானோம்


இவைகள்
அனைத்தையும்
மறக்களானோம்
வாழ்க்கையில்
மயக்கமானோம்...!

திங்கள், மே 25, 2009

முதல்வன்



ஆதிமனிதன் ஆதமே
அகிலத்தின் முதல் மனிதன்
அதனால்
ஆண்டவன் சொல்கிறான்
ஆதமே முதல்வனென்று...

வாழ்க்கையைப் பலர்
போட்டிகள் நிறைத்து
பேட்டிகள் கொடுத்து
வாய்மையைக் குலைத்து
பொய்யன்பை வளர்த்து
போலிப் புன்னகையுடன்
வாழ்வை வென்றதாய்
நகைக்கும் இவர்கள்
சொல்லலாம்
நாங்கள் தான் முதல்வனென்று...

நாட்டை ஆள்பவர்களும்
நடனம் ஆடுபவர்களும்
நளினமாய் இருப்பவர்களும்
நவிலலாம்
நாங்கள் தான் முதல்வனென்று...

கற்றதைக் கற்பிப்பவர்களும்
கற்பனைக் கலைஞர்களும்
கல்லூரி மாணவர்களும்
விற்பனை விற்பண்னர்களும்
விடைபகரலாம்
நாங்கள் தான் முதல்வனென்று...

அருள்வழங்கும் சாமியார்களும்
பொருள் குவிக்கும் குபேரர்களும்
இருள்மொழி அரசியல்வாதிகளும்
மருள்மொழி வழங்கலாம்
நாங்கள்தான் முதல்வனென்று...

முகத்திரை விலக்கினால்
அகத்திணை மலரும்
முதல்வனாய் முகடம்சூட
முன்னுரை வேண்டும்...

முதல்வன்-அவன்
முழுமணி மதியானன்
மனிதர்களில்
மனிதனாக வாழ்பவன்
மனிதநேயத்தைச்
சுவாசிப்பவன்
தான்யாரென்ற மெய்யறிவு
நிறைந்தவன்...

மதம்பேதமில்லாமல்
பதமை நிறைந்த இதயவன்
சோதனைகளைச்
சாதனையாக்குபவன்
எண்ணத்தில் ஏழையாகவாழ்பவன்
தர்மத்தை தர்மம்
செய்பவன்
அன்பை விளைவிப்பவன்
அவனே சம்பூரண மனிதன்
அவன்தான்

புதன், மே 20, 2009

எதைத் தேடுகிறோம்


பிறந்து அழுதபோது
அழுதத்தேடலென
அன்னைமூட்டிய
அமுதம் அருந்தினேன்

மழலையாய்
கேள்விகள் தொடுத்தபோது
வேதனத்தேடலென
வேதச்சாலை சென்றேன்

பள்ளிப் பருவத்தில்
துள்ளிவிளையாடிய போது
துளிர் விட்டத் தேடலில்
நட்பை நயங்கொண்டேன்
கல்விக் கடலில்
கலந்தபோது
கசடறகற்க்கும் தேடலில்
கரைந்தேன்

கல்லூரி நாட்களில்
கண்ணுணி பெண்ணுடன்
காதல் தேடலில்
கவர்ந்தேன்

வேலைத்டேலில்
வேர்வைச் சிந்தி
கிடைத்தவேலையில்
கலைப் பதித்தேன்

மனம் நிறைந்த மனைவி
குணம் கொண்ட குழந்தைகள்
பஞ்சமில்லாப் பணம்
குடும்பத்தேடலில் குடிக்கொண்டேன்

உலக வாழ்க்கைக்கு
தேவையானத் தேவைகளை
பூர்த்திக் கொண்டேன்
தேடிய அனைத்தையும்
எண்ணத்தில் எழுதிக்கொண்டேன்

எல்லாம் தேடியும் மனம்மட்டும்
எதையோத் தேடுகிறது
இன்னும் தேடலைத்தேடுகிறது
அது
மரணத்தேடல் அல்ல
“நான்” யெனம் மனிதத்தேடல்
அதுவே பூரணத்தேடல்...!

செவ்வாய், மார்ச் 24, 2009

உழவு



வீதியோரம் வண்ணத்துப்பூக்கள்
நம்
விழியோரம் ஆனந்த
மகிழ்நீர்த்துளிகள்

பச்சைநிறப் பயிர்களில்
இச்சைக்கொள்ளும்
நம் விழிகள்
இது
உழவனின் வேர்வைத்துளிகள்

விவசாயமில்லாத நாடு
உயிரில்லா எழும்புக்கூடு
பயிர்களின் வளர்ச்சியே
உயிர்களின் உணர்ச்சி
உழவனின் நம்பிக்கைத்தான்
நாட்டின் அஸ்திவாரம்

அழும்குழந்தைக்கு
அமுதம் ஊட்டுவதைப்போல்
வாடும்பயிர்களுக்கு
பாசனம்மட்டுமல்ல
பாசத்தையும் ஊட்டும்
உழவர்கள்
உணவுபண்டங்களுக்காக
மண்ணை உழுது
பயிர் செய்யும் நாம்
மனதை உழுது
மனிதனாவது
எப்போது...?

பணம்



பாசவண்ணத்தில்
வாழ்க்கைகூட்டை
வடிவமைத்து
நேசஎண்ணத்தில் நெறிபடுத்தி
நேர்ந்தாரையும்
சார்ந்தோரையும்
சடதிச் செய்யமுடியுமா...?

பிச்சைப் பாத்திரம்ஏந்தும்
இச்சைமுத்து
பச்சைநிற வாகனத்தில்
வளம்பெற முடியுமா...?

கயல்விழியோடு
காதலில் முழ்கி
மனம்கலந்த மனங்கள்
காதலைமறக்க முடியுமா...?

பல்லாக்கு தூக்கும்
பணியாளன்
பவனிவரும் அரசனைப்போல்
அரசாளத்தான் முடியுமா...?

தேன்கூட்டைக் காக்கும்
தேனிக்களை
ஒருகல் விட்டால்போதும்
கலைந்துவிடுவது போல்
முடியாத முயற்சிகளை
முடித்துவிடும்
முறித்தும்விடும்
பணம்...!