செவ்வாய், மார்ச் 24, 2009

உழவு



வீதியோரம் வண்ணத்துப்பூக்கள்
நம்
விழியோரம் ஆனந்த
மகிழ்நீர்த்துளிகள்

பச்சைநிறப் பயிர்களில்
இச்சைக்கொள்ளும்
நம் விழிகள்
இது
உழவனின் வேர்வைத்துளிகள்

விவசாயமில்லாத நாடு
உயிரில்லா எழும்புக்கூடு
பயிர்களின் வளர்ச்சியே
உயிர்களின் உணர்ச்சி
உழவனின் நம்பிக்கைத்தான்
நாட்டின் அஸ்திவாரம்

அழும்குழந்தைக்கு
அமுதம் ஊட்டுவதைப்போல்
வாடும்பயிர்களுக்கு
பாசனம்மட்டுமல்ல
பாசத்தையும் ஊட்டும்
உழவர்கள்
உணவுபண்டங்களுக்காக
மண்ணை உழுது
பயிர் செய்யும் நாம்
மனதை உழுது
மனிதனாவது
எப்போது...?

பணம்



பாசவண்ணத்தில்
வாழ்க்கைகூட்டை
வடிவமைத்து
நேசஎண்ணத்தில் நெறிபடுத்தி
நேர்ந்தாரையும்
சார்ந்தோரையும்
சடதிச் செய்யமுடியுமா...?

பிச்சைப் பாத்திரம்ஏந்தும்
இச்சைமுத்து
பச்சைநிற வாகனத்தில்
வளம்பெற முடியுமா...?

கயல்விழியோடு
காதலில் முழ்கி
மனம்கலந்த மனங்கள்
காதலைமறக்க முடியுமா...?

பல்லாக்கு தூக்கும்
பணியாளன்
பவனிவரும் அரசனைப்போல்
அரசாளத்தான் முடியுமா...?

தேன்கூட்டைக் காக்கும்
தேனிக்களை
ஒருகல் விட்டால்போதும்
கலைந்துவிடுவது போல்
முடியாத முயற்சிகளை
முடித்துவிடும்
முறித்தும்விடும்
பணம்...!

வியாழன், மார்ச் 05, 2009

ஏகத்துவம்




இரண்டு என்பதை
ஒன்றெனக்கூறுவது
ஏகத்துவம்...

தன்னையும்
படைத்தவனையும்
வேறுப்படுத்தி மாறுப்படுவது
துவைதம்...

துவைதவாதிகளே
தூயவனுக்கு
துணைவைப்பவர்கள்...
தன்னிலே சர்வத்தையும்
சர்வத்தில் தன்னையும்
காண்பதே அத்வைதம்...

அத்வைத அறிவு
இல்லையெனில்
ஆண்டவனைத் தரிசிக்க
முடியாது...

ஆன்மீகம் என்பது
ஆடையில் இல்லை
அது
அறிவில் தெளிவில்...

இறைதரிசனம் பெறுவதற்கு
நிறைவான குருத்தேவை
வழிக்காட்டல் இல்லாமல்
வாழ்க்கை இல்லை...

ஞானம் பெற
எளிமையான எண்ணமும்
தெளிந்த மனமும்
அறிந்துணர ஆர்வமும்
நம்மில் அதிகரித்தாலே
ஏகமும் ஏழ்மையும்
நம்மிலே எழிலுறும்...!

திருவாகி யாங்கும் யாவும்
இல்லையென்றிலாது
நிறைந்தும் விரிந்தும்
பரவியும் விரவியும்
எதுகையிலாது
அனைத்துமாய் நின்றியங்கும்
ஒன்றே ஏகம் என்றுரைத்தார்கள்
எம்குருநாதர்...!