புதன், மே 27, 2009

கவனமாகயிரு...



இளைஞனே
வாழ்க்கையை லட்சியத்தோடு
வாழ்ந்து வெற்றிபெற வேண்டிய
நீ
சிலரது வார்த்தைகளில்
உன்னை இழந்துவிடாதே
கவனமாகயிரு...

மருத்துவனாக
கணினியாளனாக
விஞ்ஞானியாக
பொறியாளனாக
இதில் ஏதோன்றாய்
நீ
சமைந்திடவே உன்னை
சமைத்தவர்களின் கனவு
அதைக் கலைப்பவர்களின்
கைகளில் சிக்கிவிடாதே
கவனமாகயிரு...

பள்ளிப்பாட நூல்களை
சுமக்கவேண்டிய உன் கரங்களில்
கலவரச்செய்திகளையும்
மதவாதப் பிரச்சனைகளையும்
சுமந்து வரும்
பத்திரிக்கைகளைத் திணிக்கப்படுவதை
அனுமதிக்காதே
கவனமாகயிரு...

கல்லூரி வாயில்களில்
சில புல்லுருவிகளின்
கோலங்கள்
உன்தோழமைக் கண்ணோட்டத்திற்கு
அவர்கள் அணியவிப்பது
மதவாதக் கண்ணாடி
கண்ணிலியாய்
நீ
உன்வகுப்புத் தோழர்களுடன்
வகுப்பு வாதம் செய்வதற்கு
கவனமாகயிரு...

சமுதாயம் என்றச் சாயத்தில்
உன்னை நிறமேற்றி
உனக்கு ஒருவர்ணத்தை
கொடுப்பதற்கு சிலர்
தருணம் பார்க்கிறார்கள்
உன்னைத் தாரைவார்த்து விடாதே
கவனமாகயிரு...

எங்கோ நிகழக்கூடிய
சில சம்பவங்கள் படமெடுக்கப்பட்டு
உன் சிந்தை அரங்கில்
திரையிடுவதற்கு
திட்டங்கள் தயாராக்கப்படுகிறது
அதை நீ
தீண்டிவிடாதே
கவனமாகயிரு...

தடுக்கப்படுகிறோம்
ஒடுக்கப்படுகிறோம்
நசுக்கப்படுகிறோம்
என்றத் தலைப்புக்களில்
மூலைச்சலவைகள் செய்து
முணைப்போடு

முறச்சிப்பார்கள்
மருள்கொண்டு விடாதே
கவனமாகயிரு...

வேதத்தைக் காண்பித்து
ஞானம் போதிக்கின்றோம்
கலங்கரை விளக்காய்
நேர்வழிக் காட்டுகிறோம்
என்று
மெய்ஞானாம் அறியவேண்டிய
உன்னை
அஞ்ஞானியாக்கிவிடுவார்கள்
கவனமாகயிரு...

மனிதநேயத்தை
நீ
விதையுண்டிருக்கிறாய்
அது துளிர்விடுவதைத் துண்டித்து
தீவிரவாதம் பேசி
சுதந்திரமாய் வாழவேண்டிய உன்னை
நான்கு சுவருக்குள்
சிறைவைத்து விடுவார்கள்
கவனமாகயிரு...

நீ என்பது இன்னொருவனின்
ஆளுமையல்ல
நீ சுயமிக்கவன்
சூத்திரம் நிறைந்தவன்
உன் பலம் தெரியாமல்
உன்னை பலவீனர்களிடம்
ஒப்படைத்து விடாதே
கவனமாகயிரு...!

செவ்வாய், மே 26, 2009

எச்சில் மனிதர்கள்...



சேற்று மனிதர்கள்
வீட்டின் வாசல்வரை
நேற்றைய்ய துளசி
பூஜையறைவரை...

உண்டதுப் போக
மிச்சத்தைக் கொடுப்பதற்கில்லை
எச்சத்தைக் கொடுக்கும்
எச்சில் மனிதர்கள்...

இடுப்பில் துண்டு
அடுப்பில் கஞ்சி
உழைப்பில்லா சோம்பேறிகளா
இவர்கள்

இல்லை இல்லை
இவர்கள்
இயந்திர மனிதர்கள்...

உற்பத்தியாகும்
பொருளுக்கு
முகவரிக் கொடுப்பது
இயந்திரமல்ல
முதலாழித்துவம்...

சுயத்தையறியா சுப்பிகளும்
சமத்துவம் பேசும்
அவத்துவவாதிகளும்
மனிதநேயம் பேசுவார்கள்
ஆனால்
தேவைப்படுகிறது இன்றும்
சாதிச் சான்றிதழ்கள்...

எத்தனை மாற்றங்கள்
நிகழ்ந்தாலும்
மாறவில்லை
சுடுகாட்டுக் குடில்கள்...

கருவறிந்த மனிதர்கள்
அருவறிந்த புனிதர்கள்
அரசியல் களம்
அமைத்தால் தான்
சுயமறிந்த
சூரிய வாழ்க்கை
தலீத்களுக்கு மட்டுமல்ல
தரணியில் வாழும்
மனிதர்களுக்கு...!

திங்கள், மே 25, 2009

முதல்வன்



ஆதிமனிதன் ஆதமே
அகிலத்தின் முதல் மனிதன்
அதனால்
ஆண்டவன் சொல்கிறான்
ஆதமே முதல்வனென்று...

வாழ்க்கையைப் பலர்
போட்டிகள் நிறைத்து
பேட்டிகள் கொடுத்து
வாய்மையைக் குலைத்து
பொய்யன்பை வளர்த்து
போலிப் புன்னகையுடன்
வாழ்வை வென்றதாய்
நகைக்கும் இவர்கள்
சொல்லலாம்
நாங்கள் தான் முதல்வனென்று...

நாட்டை ஆள்பவர்களும்
நடனம் ஆடுபவர்களும்
நளினமாய் இருப்பவர்களும்
நவிலலாம்
நாங்கள் தான் முதல்வனென்று...

கற்றதைக் கற்பிப்பவர்களும்
கற்பனைக் கலைஞர்களும்
கல்லூரி மாணவர்களும்
விற்பனை விற்பண்னர்களும்
விடைபகரலாம்
நாங்கள் தான் முதல்வனென்று...

அருள்வழங்கும் சாமியார்களும்
பொருள் குவிக்கும் குபேரர்களும்
இருள்மொழி அரசியல்வாதிகளும்
மருள்மொழி வழங்கலாம்
நாங்கள்தான் முதல்வனென்று...

முகத்திரை விலக்கினால்
அகத்திணை மலரும்
முதல்வனாய் முகடம்சூட
முன்னுரை வேண்டும்...

முதல்வன்-அவன்
முழுமணி மதியானன்
மனிதர்களில்
மனிதனாக வாழ்பவன்
மனிதநேயத்தைச்
சுவாசிப்பவன்
தான்யாரென்ற மெய்யறிவு
நிறைந்தவன்...

மதம்பேதமில்லாமல்
பதமை நிறைந்த இதயவன்
சோதனைகளைச்
சாதனையாக்குபவன்
எண்ணத்தில் ஏழையாகவாழ்பவன்
தர்மத்தை தர்மம்
செய்பவன்
அன்பை விளைவிப்பவன்
அவனே சம்பூரண மனிதன்
அவன்தான்

புதன், மே 20, 2009

எதைத் தேடுகிறோம்


பிறந்து அழுதபோது
அழுதத்தேடலென
அன்னைமூட்டிய
அமுதம் அருந்தினேன்

மழலையாய்
கேள்விகள் தொடுத்தபோது
வேதனத்தேடலென
வேதச்சாலை சென்றேன்

பள்ளிப் பருவத்தில்
துள்ளிவிளையாடிய போது
துளிர் விட்டத் தேடலில்
நட்பை நயங்கொண்டேன்
கல்விக் கடலில்
கலந்தபோது
கசடறகற்க்கும் தேடலில்
கரைந்தேன்

கல்லூரி நாட்களில்
கண்ணுணி பெண்ணுடன்
காதல் தேடலில்
கவர்ந்தேன்

வேலைத்டேலில்
வேர்வைச் சிந்தி
கிடைத்தவேலையில்
கலைப் பதித்தேன்

மனம் நிறைந்த மனைவி
குணம் கொண்ட குழந்தைகள்
பஞ்சமில்லாப் பணம்
குடும்பத்தேடலில் குடிக்கொண்டேன்

உலக வாழ்க்கைக்கு
தேவையானத் தேவைகளை
பூர்த்திக் கொண்டேன்
தேடிய அனைத்தையும்
எண்ணத்தில் எழுதிக்கொண்டேன்

எல்லாம் தேடியும் மனம்மட்டும்
எதையோத் தேடுகிறது
இன்னும் தேடலைத்தேடுகிறது
அது
மரணத்தேடல் அல்ல
“நான்” யெனம் மனிதத்தேடல்
அதுவே பூரணத்தேடல்...!