செவ்வாய், மார்ச் 24, 2009

உழவு



வீதியோரம் வண்ணத்துப்பூக்கள்
நம்
விழியோரம் ஆனந்த
மகிழ்நீர்த்துளிகள்

பச்சைநிறப் பயிர்களில்
இச்சைக்கொள்ளும்
நம் விழிகள்
இது
உழவனின் வேர்வைத்துளிகள்

விவசாயமில்லாத நாடு
உயிரில்லா எழும்புக்கூடு
பயிர்களின் வளர்ச்சியே
உயிர்களின் உணர்ச்சி
உழவனின் நம்பிக்கைத்தான்
நாட்டின் அஸ்திவாரம்

அழும்குழந்தைக்கு
அமுதம் ஊட்டுவதைப்போல்
வாடும்பயிர்களுக்கு
பாசனம்மட்டுமல்ல
பாசத்தையும் ஊட்டும்
உழவர்கள்
உணவுபண்டங்களுக்காக
மண்ணை உழுது
பயிர் செய்யும் நாம்
மனதை உழுது
மனிதனாவது
எப்போது...?

1 கருத்து:

  1. அருமை :-)

    //விவசாயமில்லாத நாடு
    உயிரில்லா எழும்புக்கூடு
    பயிர்களின் வளர்ச்சியே
    உயிர்களின் உணர்ச்சி
    உழவனின் நம்பிக்கைத்தான்
    நாட்டின் அஸ்திவாரம்//

    சரியா சொன்னிங்க

    can u remove the word verification in comment settings its hard to comment

    பதிலளிநீக்கு