புதன், மே 20, 2009

எதைத் தேடுகிறோம்


பிறந்து அழுதபோது
அழுதத்தேடலென
அன்னைமூட்டிய
அமுதம் அருந்தினேன்

மழலையாய்
கேள்விகள் தொடுத்தபோது
வேதனத்தேடலென
வேதச்சாலை சென்றேன்

பள்ளிப் பருவத்தில்
துள்ளிவிளையாடிய போது
துளிர் விட்டத் தேடலில்
நட்பை நயங்கொண்டேன்
கல்விக் கடலில்
கலந்தபோது
கசடறகற்க்கும் தேடலில்
கரைந்தேன்

கல்லூரி நாட்களில்
கண்ணுணி பெண்ணுடன்
காதல் தேடலில்
கவர்ந்தேன்

வேலைத்டேலில்
வேர்வைச் சிந்தி
கிடைத்தவேலையில்
கலைப் பதித்தேன்

மனம் நிறைந்த மனைவி
குணம் கொண்ட குழந்தைகள்
பஞ்சமில்லாப் பணம்
குடும்பத்தேடலில் குடிக்கொண்டேன்

உலக வாழ்க்கைக்கு
தேவையானத் தேவைகளை
பூர்த்திக் கொண்டேன்
தேடிய அனைத்தையும்
எண்ணத்தில் எழுதிக்கொண்டேன்

எல்லாம் தேடியும் மனம்மட்டும்
எதையோத் தேடுகிறது
இன்னும் தேடலைத்தேடுகிறது
அது
மரணத்தேடல் அல்ல
“நான்” யெனம் மனிதத்தேடல்
அதுவே பூரணத்தேடல்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக