செவ்வாய், மே 26, 2009

எச்சில் மனிதர்கள்...



சேற்று மனிதர்கள்
வீட்டின் வாசல்வரை
நேற்றைய்ய துளசி
பூஜையறைவரை...

உண்டதுப் போக
மிச்சத்தைக் கொடுப்பதற்கில்லை
எச்சத்தைக் கொடுக்கும்
எச்சில் மனிதர்கள்...

இடுப்பில் துண்டு
அடுப்பில் கஞ்சி
உழைப்பில்லா சோம்பேறிகளா
இவர்கள்

இல்லை இல்லை
இவர்கள்
இயந்திர மனிதர்கள்...

உற்பத்தியாகும்
பொருளுக்கு
முகவரிக் கொடுப்பது
இயந்திரமல்ல
முதலாழித்துவம்...

சுயத்தையறியா சுப்பிகளும்
சமத்துவம் பேசும்
அவத்துவவாதிகளும்
மனிதநேயம் பேசுவார்கள்
ஆனால்
தேவைப்படுகிறது இன்றும்
சாதிச் சான்றிதழ்கள்...

எத்தனை மாற்றங்கள்
நிகழ்ந்தாலும்
மாறவில்லை
சுடுகாட்டுக் குடில்கள்...

கருவறிந்த மனிதர்கள்
அருவறிந்த புனிதர்கள்
அரசியல் களம்
அமைத்தால் தான்
சுயமறிந்த
சூரிய வாழ்க்கை
தலீத்களுக்கு மட்டுமல்ல
தரணியில் வாழும்
மனிதர்களுக்கு...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக