திங்கள், மே 25, 2009

முதல்வன்



ஆதிமனிதன் ஆதமே
அகிலத்தின் முதல் மனிதன்
அதனால்
ஆண்டவன் சொல்கிறான்
ஆதமே முதல்வனென்று...

வாழ்க்கையைப் பலர்
போட்டிகள் நிறைத்து
பேட்டிகள் கொடுத்து
வாய்மையைக் குலைத்து
பொய்யன்பை வளர்த்து
போலிப் புன்னகையுடன்
வாழ்வை வென்றதாய்
நகைக்கும் இவர்கள்
சொல்லலாம்
நாங்கள் தான் முதல்வனென்று...

நாட்டை ஆள்பவர்களும்
நடனம் ஆடுபவர்களும்
நளினமாய் இருப்பவர்களும்
நவிலலாம்
நாங்கள் தான் முதல்வனென்று...

கற்றதைக் கற்பிப்பவர்களும்
கற்பனைக் கலைஞர்களும்
கல்லூரி மாணவர்களும்
விற்பனை விற்பண்னர்களும்
விடைபகரலாம்
நாங்கள் தான் முதல்வனென்று...

அருள்வழங்கும் சாமியார்களும்
பொருள் குவிக்கும் குபேரர்களும்
இருள்மொழி அரசியல்வாதிகளும்
மருள்மொழி வழங்கலாம்
நாங்கள்தான் முதல்வனென்று...

முகத்திரை விலக்கினால்
அகத்திணை மலரும்
முதல்வனாய் முகடம்சூட
முன்னுரை வேண்டும்...

முதல்வன்-அவன்
முழுமணி மதியானன்
மனிதர்களில்
மனிதனாக வாழ்பவன்
மனிதநேயத்தைச்
சுவாசிப்பவன்
தான்யாரென்ற மெய்யறிவு
நிறைந்தவன்...

மதம்பேதமில்லாமல்
பதமை நிறைந்த இதயவன்
சோதனைகளைச்
சாதனையாக்குபவன்
எண்ணத்தில் ஏழையாகவாழ்பவன்
தர்மத்தை தர்மம்
செய்பவன்
அன்பை விளைவிப்பவன்
அவனே சம்பூரண மனிதன்
அவன்தான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக