திங்கள், ஆகஸ்ட் 10, 2009

தற்கொலைகள்


மரணத்தைக் கண்டு
அஞ்சினாலும்
கெஞ்சினாலும்
மரணம்
கட்டித்தலுவாமல்
கடப்பதில்லை
எந்தநேரத்திலும்
மரணிக்கப்போகும்
நமக்கு
அது எப்போது என்பது
மட்டும்
திரையிடப்பட்டிருக்கிறது
திறந்திருந்தால்
மரணபீதியில்
ரணமாகும்
மனிதவாழ்க்கைகள்...

இயல்பாய்
தழுவவேண்டிய மரணத்தை
சிலர்
இனம் மனம்
மதம் நிறம்
மொழி மோப்பு
பொருள் வறுமை
இவைகளுக்காக
பொறுமையிழந்து
இன்னுயிரை
இழப்பதற்கு இசையும்
தற்கொலைப் பிரியர்கள்...

தன்னைக் கேட்காமல்
தான் பிறந்தபோது
தன்னைத் தான்
கொலைச் செய்துக் கொள்வது
எப்படிப் பொருந்தும்...?

உயிரைவிட்டு விடுவதால்
உறவாய் வந்த பிரச்சனைகள்
உதிர்ந்துவிடுமா...?
உலர்ந்துதான் விடுமா...?

உயிரைக்கொண்டு
பிரச்சனையைப் பார்ப்பதைவிட
அறிவைக்கொண்டு
பார்வையிட்டால்
அறவழி பிறக்கும்
அஞ்ஞானம் விழக்கும்...

எந்த எண்ணத்தில்
இறக்கின்றோமோ
அதே எண்ணத்தில்
எழுப்பப் படுவோம்
என்கிறது இஸ்லாம்...

உடலைமாய்த்துக் கொள்வதால்
ஆன்மா அமைதியடைவதில்லை
உடலை வைத்துதான்
உண்மையை விளங்கமுடியும்
தன்னையும் அறியமுடியும்...

தன்னைமாய்த்துக் கொண்டு
சார்ந்தவர்களுக்கு
சந்தாபம் தந்துவிட்டு
கோழையாய் பாடையில்
போவதைவிட
உடையவர்களுக்கு
உறுதுணையாய்
உணவாய் உணர்வாய்
உணர்ச்சியாய் உரிமையாய்
உயிர்தந்து வாழ்வதற்கு
உங்களை
தற்கொலை செய்துக்கொள்ளுங்கள

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக