சனி, ஆகஸ்ட் 15, 2009

கொடை



வறுமை வெறுமையாவதற்கு
வளமானவர்கள்
வள்ளலாகவேண்டும்

வாரிஇரைக்க வேண்டாம்
ஏழைகளுக்கான
வரிகளை வரம்பு மீறாமல்
வழங்கினாலே
நாம் வள்ளல்தான்

மதம் பார்த்து கொடுப்பது
கொடையல்ல
மனிதம்மறிந்து அளிப்பதே
கொடை

செத்தும் கொடுத்தார்
சீதாகாதி
இவரைப்போன்றவர்களை
இன்றும் இறவாமல் செறிவுடன்
வாழ்த்திக்கொண்டிருக்கிறது
கொடை

இருப்பவர் பொருளையும்
இல்லாதோர் இன்சொல்லையும்
இணக்கத்துடன் ஈதலே
கொடைதான்

நடைப்பாதையில்
நறுக்கென தைக்கும் முள்ளை
நளினமாய் நகர்த்துவதும்
கொடையென்றார்கள்
நபிகள் நாயகம்

அறியாதவருக்கு
அரிவரி கற்பிப்பதும்
குணம் சிதராமல்
குடும்பத்தாருடன் கூடிமகிழ்வதும்
கூழைமைத் தவறாமல்
நடப்பதும்
மனம் நோகாமல்
மனிதர்களிடம் மணப்பதும்
விவேகியாய்
விட்டுக் கொடுப்பதும்
நாம்
மனிதனாய் சமைந்ததற்கு
நம் வாழ்க்கையில்
கொடுக்க வேண்டிய
கொடை...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக