புதன், ஆகஸ்ட் 26, 2009

சாரல்


பெய்துக் கொண்டிருக்கிறது
சிலர் நனைகின்றோம்
பலர் நகர்கின்றோம்
எல்லையில்லாத்
தேவைகளைக் கூட்டியதால்
தேடலில் தொலைகின்றோம்...

தன்னிடம் கிடைப்பதை
விட்டுவிட்டு
தானையமாய் திரிவதில்
நாம் தீவிரவாதிகள்...

சுயநலம் என்பது
நமக்கு
மற்றவர்களோடு அல்ல
நம்மிடமே...

அனைத்தையும்
ஆசைக்கு அடகுவைத்து விட்டு
அந்த அனைத்திலும்
தன்னை மீட்க தவறுகிறோம்...

சின்ன சின்ன அறிவுகளில்
சிறைப்படும் நம்மால்
சம்பூரண அறிவுப்பெற்று
விடுதலையாகத்
தெரியவில்லை
பெய்வது
ஞானமழை
சாரலுக்கு தேவையில்லை
குடை...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக