செவ்வாய், ஜூலை 07, 2009

பூர்வீகம்

பிறந்த ஊரும்
வளர்ந்த நாடும்
வாழ்பவர்களுக்கு
பூர்வீகம் என்று
பூரிப்பு

புறப்பட்ட இடத்தை
புரிந்துணர பலருக்கு
புரியாத புதிர்

புகலை தான்னென்று
புகழ்ச்சிக் கொள்வதால்
பூரணம் நமக்கு
புதையல்
உலகறிவு உரியவருக்கு
பொருள் கொடுக்கும்
ஆன்மறிவு அனைவருக்கும்
அமைதிக் கொடுக்கும்

பூர்வீகத் தேட்டம்
நம்மிடம்
புரட்சி செய்தால்
புத்தி பூகம் விலக்கும்

பின்நோக்கி
புலன்
பின் தொடர்ந்தால்
முன்நோக்கி
பூர்வீகம்
முக்தித் தரும்

தாயின் கருவரையில்
உருவானோம்
தந்தையின் உதிரத்தில்
அருவானோம்
உணவுப்பொருட்களில்
கருவானோம்
பஞ்சபூதங்களில்
கலவையானோம்
சூத்திரத்தின்
சூக்குமம்மானோம்
சூக்குமத்தில்
சூனியமானோம்


இவைகள்
அனைத்தையும்
மறக்களானோம்
வாழ்க்கையில்
மயக்கமானோம்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக