வியாழன், ஜூலை 16, 2009

கோடையும் வாடையும்




கோடையும் வாடையும்
வாழ்க்கை பயணத்தின் ஆடை
வடகாற்று வாசனையில்
நம்மனம் தேடுவது ஒடை …

கோடைக்கால மேகத்தில்
ஜாடைத் தேடும் நம்கண்கள்
வாடைகாற்று வீச்சத்தில்
வாடிவிடும் குடும்பபெண்கள்…

ஏழைகளின் வாழ்க்கையில்
என்றுமே வரட்சியான கோடை
ஆனால்
ஏந்தலர்கள் எத்தனித்தால்
ஏழ்மை
பெற்றிடும் கொடை

பாலைவன மனிதர்களுக்கு
வீசும்
பாசத்தின் வாடை
சோலையாகும் வாழ்க்கைக்கு
இவைகள்
என்றுமே இல்லை தடை

உஷ்னத்தில் உருவாகுவது
உயிர்களின் ஊட்டம்
ஆனால்
உக்கிரத்தில் உருகுலைவது
மனித உறவின் ஆட்டம் …

புறத்தேடலில் வீழ்பவனுக்கு
வசந்த காலமும் கோடைதான்
ஆனால்
அகத்தேடலில் முழ்கியவனுக்கு
எக்காலமும் வாடைதான் …

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக