செவ்வாய், ஜூலை 21, 2009

இருளும் ஒளியும்

படிப்பிருந்தும்
பணமிருந்தும்
பதவியிருந்தும்
பதிஞானமில்லா
மருள் கொள்ளும் மனம்
இருள் கொள்கிறதே....

வேதம் படித்தாலும்
வேகம் படியாத
வேற்றுமைக் களையாத
வேதந்தனையறியாத
வேற்றருக் கொள்ளும் வாழ்க்கை
மாற்றொன்றுமில்லாமல்
இருள் கொள்கிறதே...

ஏகனை வணங்கி
ஏகத்துவம் பேசி
எகத்தாளம் செய்து
ஆகத்துவமில்லாத
அஞ்சித்தம் செய்யும்
வாஞ்சைகள் அனைத்தும்
இருள் கொள்கிறதே...

கருவை அறிய
குருவைத் தேடி
அகவிருள் போக்கி
அன்பைத் தேக்கி
அருட்கண் திறந்து
புன்கண்னில்லா
புவியினிலே
பூரண இருள் நீங்கி
பிரகாசிக்கின்ற வாழ்க்கையே
ஒளிமயமானது...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக