சனி, ஆகஸ்ட் 22, 2009

மறதி



நினைத்து நினைத்து
நிம்மதி இழக்கவைக்கும்
நினைவுகள்...

மறதி இல்லையெனில்
மனிதனிடம்
வாழ்க்கையில்லை
மறப்பதால்
மனம் மலர்கிறது
வாழ்வு சுவைக்கிறது....

மன்னிக்க தெரிந்திந்தவர்களும்
மறக்க துணிந்தவர்களும்
மாசில்லா மனிதர்கள்...

நிகழ்வை
மறந்தவர்களுக்கு
அதை நினைவுப்படுத்தி
அதில் நிம்மதி காண்பவர்கள்
நிகாதனர்கள்...

மறக்க வேண்டியதை
நினைப்பதும்
நினைக்க வேண்டியதை
மறப்பதும்
மனித குணமல்ல...

அன்பை மறப்பவன்
அனாதை
பண்பை மறப்பவன்
பாதகன்
பாசத்தை மறப்பவன்
பாவி
நீதியை மறப்பவன்
நீசன்
தன்னை மறப்பவன்
தாசன்...

நீக்கமற கலந்திருப்பவனை
நித்தமும் மறப்பதினால்
நீ நானெனும் வேற்றுமை
பிறக்கிறது
தெளிய வேண்டிய
ஒற்றுமை மறக்கிறது
அதனால் நேயம்
மரணிக்கிறது...!

2 கருத்துகள்:

  1. //மறதி இல்லையெனில்
    மனிதனிடம்
    வாழ்க்கையில்லை
    மறப்பதால்
    மனம் மலர்கிறது
    வாழ்வு சுவைக்கிறது....//

    சுவை மிகுந்த மணமான வரிகள்.

    மறதியைப் பற்றிய அழகான கவிதை அருமை.

    தங்களுக்கும்,குட்டீஸ்களுக்கும்,குடும்பத்தார் அனைவருக்கும் இனிய ரமலான் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு