புதன், செப்டம்பர் 24, 2008

1.இறைவா உன்னிடம்


இறைவா உன்னிடம்…


இருகரம் ஏந்துவதும்
உன்னிடம்
என் இன்னல்களை
இயம்புவதும்
உன்னிடம்…

துன்பத்தில் மிகைத்தாலும்
உன்னிடம்
நான் இன்பத்தில்
திளைத்தாலும்
உன்னிடம்…

அகிலப் படைப்பும்
உன்னிடம்
என் ஆத்ம துடிப்பும்
உன்னிடம்…

அன்பு ஒங்குவதும்
உன்னிடம்
என் ஆசைகள் வளர்வதும்
உன்னிடம்…

அபலைகள்
அழுவதும் உன்னிடம்
என் கவலைகள் கூறுவதும்
உன்னிடம்…

ஆறுதல் தேடுவதும்
உன்னிடம்
எனக்கு
மாறுதல் கிடைக்கும்
உன்னிடம்…

‘தக்பீர்’ கட்டுவதும்
உன்னிடம்
என்
‘தக்தீரின்’ நிர்ணயம்
உன்னிடம்…

தலை வணங்குவதும்
உன்னிடம்
நான் தலை சாயும் போது
உன்னிடம்…!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக