புதன், செப்டம்பர் 24, 2008

27.மனிதனாய் மலர்வோம்

மனிதனாய் மலர்வோம்…


அண்ணல் பெருமானே
நீங்கள்
சொன்ன சொல்தானே
உலகில் நிஜமானது
அழகில் அழகானது
அதுவே
அறிவில் உயர்வானது…

மாநபி
வருகையினால்
மனிதன்
மனிதனானான்
மன்னரின்
வார்த்தையினால்
மனிதன்
உயர்வானான்
மறையை தந்ததனால்
மனிதன்
நிலையானான்
தன்னை அறிவதனால்
மனிதன்
நிறையாவான் …

அண்ணல் நபிகளை ஆய்தால்
அகத்தினை
அங்கே காண்போம்
ஏகத்தில்
நாமும் கலந்தால்
எண்ணத்தில்
ஏகனை நினைவோம்
தன்னிடம்
தானே மாய்ந்தால்
தண்னிலே
நிதம் மலர்வோம்
உள்ளத்தில்
ஞானம் தெளிந்தால்
இல்லத்தில்
அஞ்ஞானம் கடப்போம் …

இருப்பதெல்லாம்
ஒன்றே
மறுப்பதில் இல்லை
நன்றே
அகத்திலிருப்பது விதையே
அதை
விதைத்துப் பார்த்தால்
இறையே
இதை
அறிய நாடுவோம் குருவை
அந்த
குருவில் காணுவோம்
நிறைவை
மருவை நீக்கிடும் நம்மில்
மனிதனாக்கிடும்
மண்ணில்…!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக