செவ்வாய், செப்டம்பர் 23, 2008

என் நண்பனின் வாழ்த்தும்

நள்ளுநர் தந்த நன்னயம்…

காதலுக்கு கவிதை பாடுகிறார்கள்-சிலர் சாதலுக்கு பயந்து தத்துவம் பேசுகிறார்கள்.
எதை எதையோ உலகம் பேசுகிறார்கள் உயரப்பறக்க நினைக்கிருர்கள்-ஆனால் ஒன்றை சிந்திக்க மறந்தார்கள் பலர்.

அந்த ஒன்றை தன் கவிதைப் பூக்களின் மூலம் இவர் நம்மிடம் பாடுகிறார்.எண்ணிலடங்கா ஞானக் கருத்துக்கள் ஏகத்துவக் கருத்துக்கள் இவர் கவிதைகளில் மலர்ந்து இருக்கிறது.

‘தேடலில்’ஒவ்வொருவரும் தேடவேண்டியதை தெளிவாக்கியிருக்கிறார்.
சற்குருவின் அவசியத்தை தரமாக தந்திருக்கிறார்.பலகவிதைகள் எல்லோருக்கும் எளிதாக உள்ளது என்றாலும் சில கவிதைகள் ஞானத்தை ஒரளவாவதுஅறிந்தவர்களுக்கு மட்டும் தான் உட்பொருள் விளங்குவதில் சிரமம் இல்லாமல் இருக்கிறது.

மொத்ததில் ஒரு சிறந்த கவிதைத் தொகுப்பை மக்களுக்குகுறிப்பாக சிந்திக்க துடிக்கும் இஸ்லாமிய மக்களுக்கு வாரி வழங்கியுள்ளார்.

எனது அருமை நண்பர் ‘கிளியனூர் இஸ்மத்’அவர்கள்ஒரு சிறந்த கவிஞர் மட்டுமல்ல ஒரு நல்ல எழுத்தாளரும் கூட.வாழ்க இவரின் ( கவிதை ) ஞானத் தொண்டு…!
எஸ்.ஷர்புத்தீன் அதிராம்பட்டினம் 24ஃ12ஃ2007





மலர்கின்றேன்
கரைந்த
காலத்தை நோக்கி -என் கண்ணோக்கு…கரைத் தெரியாக் கடலில்-கண்கள்கட்டப்பட்ட நிலையில்…எழுத்து எனக்கு தந்த அறிமுகம்ஆத்ம ஞானம்…ஞானப்பாட்டையில் பயின்றுக் கொண்டிருக்கும்என் நடையில்கற்றதை கடுகளவேனும் கரை சேர்க்கவே-இந்தகளம் அமைத்தேன்… அதனால்
உங்களோடு நானும் மருளில்லாமல் மலர்கிறேன்.பொருளும் அருளும் முயற்ச்சியின்றிகிடைக்கப்பெறா…பொருள் சேர்க்க வேண்டி வருணம் பூசுவதை விடஅருள் பெற தருணம் பார்ப்பதுசாலச்சிறந்ததுஅகத்தில் அமைதி விளைச்சல்விளைவதற்கு அது உகந்தது… ‘கலையினிற் சிறந்தது ஞானம்-அதைபயில்பவர்களுக்கு விலகிவிடும்அஞ்ஞானம்…அறிவைக் கொண்டு தான் அறிவை அறிந்திடல்முடியும்…ஒருவர் அனுபவிக்கும் இன்பத்தை அனைவரும்நுகர ஆவன செய்வது நன்மைபயக்கும்.’என்பது –என் ஆசானின்அருள்மொழிக் கோவை…
தன்னை மட்டும் மறந்து விட்டு அனைத்தையும் சிந்திக்கும்ஆராயும்பேதம் நிறைந்த மனிதர்களும் மார்க்கத்தின் ஆணிவேரையும் அடிதளத்தையும்அசைத்துப்பார்க்க ஆர்வப்படுகின்றவர்களுக்குமத்தியிலும்…

முதலும் நானே
முடிவும் நானே
உள்ளேயும் நானே
வெளியேயும் நானே
காலமும் நானே
கோலங்களும் நானே-என்று
அத்வைதம் கூறும்அல் குர்ஆன்…

வேதம் படிப்போரிடம் தெளிவு இல்லையெனில்படைத்தோனின் குற்றமில்லை…
அறிவென்ற ஆயுதம் நம்மிடம் இருக்கும் வரையில் ஆகமம் நம்மை விட்டு அகலாது…

ஆன்மீக நுழை வாயிலுக்குள் அழைத்துச் சென்றஅன்பர்களுக்கு நன்றிகள் சொல்லும் நேரமிது மறக்க முடியாத முகங்கள் நேசமிக்க சகோதரர்கள்…
கண்ணியத்திற்குரியவர்கள்
கலீபா முஹம்மது காலீத்
கலீபா முஹம்மது முஸ்தபா
முஹம்மது சபீர்
வக்கீல் கலீபா லியாக்கத்அலி
கலீபா சிராஜுதீன் அவர்களுக்கும்…

என் நிறைமாத கவிகளை பத்திரிக்கைகளில் பிரசுவிக்க ஊக்கங்களை வழங்கியபாசமிக்க பண்பாளர் சாந்தமிக்க சகோதரர்கண்ணியத்திற்குரிய
கலீபா பொறியாளர் முஹம்மது இக்பால் அவர்களுக்கும்…

படைப்பாளிகளின் படைப்புகளை படைத்திரட்டும் பண்பாளர்என் கவிமலர்களை இதழ் இதழாக இசைத்து கருத்துக்களை கலந்து கதைத்தஇலங்கை மண்ணின் இளவல் கலைமாமணி காவியத்திலகம்டாக்டர் புலவர் ஜின்னா ஷரிபுத்தீன்…அவர்களுக்கும்…

கவிபூக்கள் பூப்பதற்கும் மணப்பதற்கும் மனதால் மகத்துவம் படுத்தியவர்கள் உடலால் உய்தி கொடுத்தவர்கள் உகவைமிக்க சகோதரர்கள் கண்ணியமிக்கவர்கள்
ஆலிம் புலவர் கலீபா ஹுஸைன் முஹம்மது மன்பஈ
அதிரை ஷர்புத்தீன் அவர்களுக்கும்
அறிமுகவுரை தந்தமறைஞானபேழை மாத இதழுக்கும்உளம் நிறைந்து உதிர்க்கின்றேன்நன்றி… நன்றி… நன்றி…!
-கிளியனூர் இஸ்மத் ஹக்கியுல் காதிரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக