புதன், செப்டம்பர் 24, 2008

15.அன்னை

அன்னை…


ஆயிரம் பெண்களை விட
சிறந்தவள்
அன்னை…

இறைவன் படைப்பில்
நிறைவான படைப்பு
மனிதன்…
தாயின் கருவ+லமே
இறைவனின்
ஆதாரம்…

தாயின் காலடியில்
சொர்க்கம்
‘தாஹா’ நபிகள் சொன்ன
சொக்கம்…

உதிரத்தை அமுதமாக்கி
உறவை அன்பாக்கி
உயிரை அடைகாக்கும்
களஞ்சியம்
அன்னை…

பிறப்புக்கும்
உறவுக்கும்
சான்றிதழ் அளிப்பவள்
அன்னை…

பிள்ளைகளின்
உழைப்பை விட
சரிரத்தின் நலனில் மட்டுமே
கவனம் கொள்ளும்
அகல் அன்னை…

லட்சங்களை சம்பாதித்தாலும்
தாயிடம் நேசமில்லை எனில்
வாழ்க்கையில் இல்லை
லட்சணம்…

தேடி தேடிச் சென்றாலும்
தேவையானதை தேடலாம்
ஆனால் அன்பை
அவள் மட்டுமே அளிக்கும்
அமுதசுரபி அன்னை…

தாயிடம் ச்சீ…என்ற
வார்த்தையை எவன்
உதிர்த்தானோ
அவன் நீசன் என்று கூறும்
அல் குர்ஆன்…

அன்னை
அரிச்சுவடி கற்றுத்தரும்
ஆசிரியை
நடைபயில வைக்கும் நாயகி
அறிவை புகட்டும் ஆசான்
நோய் தீர்க்கும் மருத்துவர்
அழகுபடுத்தி அழகு பார்க்கும்
கலைஞி
பசியை போக்கும் பயிர்…

அன்னைக்கு நிகர்
அவளே…!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக