புதன், செப்டம்பர் 24, 2008

3.தேடல்

தேடல்…


இறைவனைத் தேடி
இமயம் வரைச் சென்றாலும்
கண்டிப்பாக
காணப்போவதில்லை…

விண்கலம் ஏறி
விண்ணுலகம் விரைந்தாலும்
வீணாகுவது நேரம்…

கடலுக்கடியில்
தரையைத் தொட்டாலும்
கரைவது காலம் …

வெளித் தேடலைக்
கை விட்டு
தன்னிடம் தானே
தனித்திடும் போது
விளங்கி விடும்…

தானும்இ சர்வமும்
ஓன்றே. . .
தன்னை சர்வத்திலும்
சர்வத்தை தன்னிலும்
காண்பதே
தேடலின் தெளிவு…!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக