புதன், செப்டம்பர் 24, 2008

30.எனக்கு நானே கண்ணாடி

எனக்கு நானே கண்ணாடி…

ஞானமறிய
ஞானியைத்
தேடி நின்றேன்…

ஞானம் பயில்வது
ஞானியவதற்கல்ல
மனிதனாக வாழ்வதற்கு…

குருவிற்கு முன்
குனிந்து பணிந்து விடலாம்
ஆனால்
மனிதனுக்கு முன் மனிதனாக
நடந்துக் கொள்வதில்
ஞானம்
மனிதனைப்
புனிதனாக்குகிறது…

எந்த பதவி
முக்தியைத் தருமோ
அந்த பதவி
மனித வாழ்க்கைக்கு
சித்தி தரும்…

ஞானம் கற்பது
நாட்டையும் ஆள்வதற்கு;
வாய்ப்பு கிடைத்தால்
ஆண்டு விடலாம்
ஆனால்
நோக்கம் அதுவல்ல…

குரு தந்த அறிவை
அறியாத போது
அதை
அடுத்தவர்களுக்கு
அள்ளித்தர
நாம் என்ன
வள்ளலா…?

மகத்துவை மனதில்
நிலை நிறுத்து முன்
நீதியாய் நிலத்தினில்
நடந்திடல்
வேண்டும்…

இறை ஞானத்தை
விளங்கி வந்தால்
ஒளி விளக்காகி
விடலாம்
விளங்குவதாய்
எண்ணம்
விளக்கம் எண்ணமல்ல…

துன்பமும் துயரமும்
மழையாய்
பொழியும் வேளை
அதில்
நனைகின்றவர்களுக்கு
குடையாய் நிற்பதே
சகோதரத்துவம்…

இது
ஞானம் கற்கும்
பணிமனை
மனிதனை மனிதனாக்கும்
ஆத்ம மருத்துவ மனை
இங்கு
எனக்கு நானே
கண்ணாடி…!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக