புதன், செப்டம்பர் 24, 2008

23.தர்ஹாவாசிகள்

தர்ஹா வாசிகள்

மதங்களைக் கடந்து
மனிதர்கள்
சங்கமிக்கும் இடம்
தர்ஹா…

வேண்டுதல்
வேறுபட்டாலும்
நம்பிக்கை
மாறுபடுவதில்லை…

ஏழை பணக்காரன்
என்ற
ஏணிப்படிகள்
இல்லாத இடம்…

நம்பி வருபவர்கள்
பலர் நலத்துடன்
கரையேறுவது
வெறும்
கனவு கதையல்ல…

மஹான்கள்
மனிதர்கள் தான்;
ஆனால்
உள்ளுறை உணர்ந்து
உள்ளத்திலும்இஎண்ணத்திலும்
சிந்தனையிலும்இ
செயலிலும்
இறையுடன் நிறைவோடு
நித்தியவான்களாய்
நிறைந்தவர்கள்…
இவர்கள்
அச்சமில்லாதவர்கள்
துக்கமில்லாதவர்கள்
என்பது
தூயவன்
தூவும் தூறல்…

இறைவனிடம்
கேட்க வேண்டியதை
மஹான்களிடம்
கேட்பதா…?

இது
புரியாத
புதியவர்களின்
பூஜிய புறப்பாடு…

எங்கும் நிறைந்த இறை
இங்கும் நிறைவதே உளம்.

இது
இறைவனுக்கு
இணை வைத்த லென்று
தங்கள்
தழிழ் நாட்டு தலைவர்கள்
சொன்னதை
துணை வைத்து
வாதாடல்கள்…

வேதத்தை காண்பித்து
இவர்கள் செய்வது
வேய்வுகள்…

அண்ணல் நபிகளை
ஆழமாக ஆய்ந்தால்
இறைவனையும்
இணை வைத்தலையும்
இலகுவாக காண முடியும்
இனம்…

பாரபட்சமில்லா
ஆய்வினால்
மட்டுமே
பரம் பொருளை
விளங்க முடியும்…!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக