புதன், செப்டம்பர் 24, 2008

8.அமைதி

அமைதி…

அமைதி
எங்கிருக்கிறது
எதில் இருக்கிறது
எப்படி இருக்கிறது…..?

தேடி கிடைப்பதற்கு –
இது
தொலைந்துபோன
பொருள் அல்ல…

தோண்டி
எடுப்பதற்கு
இது புதைந்து போன
புதையல் அல்ல…

காடுகளில்
மலை மேடுகளில்
அமைதியைத் தேடி
தன்னை
அலைய்யவிடுவதில்
கிடைப்பதும் அல்ல…

தம்மை
தணிவு படித்தி பார்த்தால்
நம் எண்ணத்தில்
தூய்மையும்
உள்ளத்தில்
உண்மையும்
செயலில்
நேர்மையும்
நம்மிடம்
விளையும் போது
தென்றலாய்
தழுவிக்கொள்ளும்
அமைதி…!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக