புதன், செப்டம்பர் 24, 2008

32.தர்மம்…

தர்மம்…

தர்மம் தலைக்காக்கும்
தவமாய்சொன்ன வார்த்தை…

தலைக்காக்க வேண்டி
தர்மம் செய்தேன்
கலைகாக்கவும்
தர்மம் செய்தேன்
ஏழைபசி போக்கவும்
தர்மம் செய்தேன்
எனக்குள் நிறைவு
நான் தர்மஸ்தன் என்று…

தர்மம்சொன்னது
நீ அதர்மஸ்தன்
நீசெய்த தர்மம் உன்னிடமே
தர்மம்செய்த எண்ணத்தையும்
தர்மம்செய்யாத வரையில்…!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக