புதன், செப்டம்பர் 24, 2008

31.வணக்கம்…

வணக்கம்…


வணக்கம்
இது இறைவனுக்கு
சொந்தமானது...

தன்னை வணங்கும்படி
இறைவன்
மனிதனுக்கு சொல்கிறான்…

வணக்கம் என்ற
வார்தையினால்
இறைவனை
வணங்க முடியாது…

வணக்கம் என்பது
செயல்பாடு
மனமும் சிந்தனையும்
ஒர் நிலை
பெறவேண்டும்-இது
ஆன்மாவிற்கும்
ஆண்டவனுக்கும்
உள்ள தொடர்பு…

மனிதனுக்கு வணக்கம்
சொல்வது-அது
இறைவனை
வணங்குவது போலன்று…

வணக்கம் சொல்வது
கீழைத் தேயத்துப் பழக்கம்
அது
தமிழர் வழக்கம்…

மனிதனுக்கு மனிதன்
வணக்கம் என்ற
வார்தையினால்
வெளிபடுத்துவது
நேசம்
மனிதனை
நேசிக்க தெரியாதவன்
இறைவனை
நேசிக்க முடியாது…

இறையின்
உயர் வெளிப்பாடு
மனிதனாக இருக்கிறான்-
அதனாலே
இறை
தனது பிரதிநிதி
மனிதன் என்கிறான்…

மனிதன்
மரணத்தை சுவைப்பவன்
மரணமாகியும்
சில மனிதர்கள்
இன்றும் வாழ்கிறார்கள்
இவர்கள்
மனிதர்களை நேசித்தவர்கள்
நேசமே
வணக்கம்…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக