புதன், செப்டம்பர் 24, 2008

28.திருக்குர்ஆன்


திருக் குர்ஆன்…

திருக்குர்ஆன்
இது
இறைவனின்
முழுமையான உரையாடல்…

வஹி எனும்
வேத வெளிப்பாடு
‘ஹிரா’ மலையின்
உச்சத்தில்…

அண்ணல் நபிகளுக்கும்
‘ஹிரா’ மலைக்கும்
ஆழமான உறவு…

ஆயிரம் ஆண்டுகளைக்
கடந்து இன்றும்
அண்ணல் நபிகளின்
அசலை அடையாளம் காட்டும்
அகல்…

வேதம்
அகமும் புறமும்
கொண்ட தேகம்
இது ஆத்ம தாகம்
கொண்டவர்களுக்கு
தருவது ‘தீன்’ எனும்
பானம்…

வாழ்க்கை
பயணத்திற்கு -இது
விபத்தில்லாத
வாகனம்…

தேகத்தில் மட்டுப்பட்டு
தேட்டம் கொண்டவர்களுக்கு
ஏகத்திரையை
அகற்றி
அமரச் செய்யும்
ஆசனம்…


நுண்ணறிவோடு
இதில் நுழைபவர்களுக்கு
‘ நூர்’ எனும்
நுண்மையின்
நிர்வாணம்…

அறிவெனும்
ஆயுதத்தால்
ஆழத்தோண்டுபவர்களுக்கு
புதையலாய் கிடைப்பது
பூரணம்…

மனிதர்களையும்
மனிதருள்
புனிதர்களையும்
புவியிர்கு
புகட்டும் புலன்;…

மன நோயுடன்
நடை பிணமானவர்களுக்கும்
உடல் நோயால்
அவதிபடுபவர்களுக்கும்
அருள்புரியும்
மருந்தகம்…

விஞ்ஞானிகளையும்
மெய்ஞ்ஞானிகளையும்
உருவாக்கும்
தொழிற்சாலை…

அறிவு
படித்தரங்களுக் கேற்ப
அறியத்தரும்
பாடசாலை…

நீதியையும்
நிஜங்களையும்
நிறம் காட்டும்
கண்ணாடி…

சரித்திரங்ளையும்
சமுகத்தினரையும்
அவர்கள் செய்த
விசித்திரங்களையும்
விகற்பிக்கும் விளக்கு…

இறந்தவர்களுக்கும்
இறையோடு
கலந்தவர்களுக்கும்
நிறைவோடு
மறை ஒதும் போது
நிறைத்திடும்
ஆத்ம சாந்தி…

புனிதமும்இபுண்ணியமும்
பூரணமான
வேதத்திற்கு முன்;
வேடம் போடுபவர்களையும்
வேய்வு செய்பவர்களையும்
இது
வழி கெடுக்கும்
வல்லாண்மை…

பாமரர்களுக்கு
இது அளிக்கும் பரிமாணம்
துவைதம்…
பதிஞானம் கொண்டவர்களுக்கு
இது வழங்குவது
அத்வைதம்…!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக