புதன், செப்டம்பர் 24, 2008

33.மரணம்…

மரணம்…

மரணம்
இது ஜீவராசிகளுக்கு
இறைவன் விரும்பிய
கரணம்…

மரணம் இல்லாத
வாழ்க்கையில்
சுவை இல்லை
வளம் இல்லை…

மரணம் அனைவருக்கும்
சமம்
அதை மறப்பதால்
மரணச்செய்தி
கேட்டதும் மனம் ஆவது
ரனம்…

மனிதர்களுக்கு
மன்னிப்பையும்
மறத்தலையும்
அருளுவது
மரணம்…

மரணம் என்பது
அச்சமல்ல
அது ஒரு மாற்றம்
உரு மாற்றம்
எந்த பொருளுக்கும்
அழிவில்லை
எல்லாம் உருமாறுகிறது
எதில் துவங்கியதோ
அதில் நிறையும்
விரளம்…

மரணம் உடலுக்கு
அதை சுவைப்பது ஆன்மா
மண்ணோடு மண்ணாகிப்போவது
மகான்கள் அல்ல
மனிதர்கள்…

மரணிப்பவரெல்லாம்
மரணமாவதில்லை
சிலர்
வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்
தத்துவங்களாய்…

உடலுக்கு ஆடை உடுத்தி
ஜாடைப்பார்த்து
நிஜங்களை மறைக்க
நிறங்கள் பூசி
பல வர்ணங்களில்
அழகு பார்த்த ஆக்கை…

மரணம் என்ற நிகழ்வில்
உயிர் களையும்போது
நான் என்பதை
உடலாய் பார்த்த உள்ளம் படும்
வேதனைகள்…

ஆன்மாவின் பிரிவு
நான் என்ற எண்ணத்தில்
அவதிகள்…

நாம் மரணமாகும் முன்
நம்மில் மரணமாவோம்…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக