புதன், செப்டம்பர் 24, 2008

9.ஏழையின் சிரிப்பில்


ஏழையின் சிரிப்பில்….

வறுமையில்
வாழ்வைத் தொடங்கி
வெறுமையில்
வாழ்பவர்கள்
ஏழைகள்…

வயிற்று பசியோடு
இவர்களது
வாழ்க்கை
விடியலை
நோக்கி…

இரவும் பகலும்
உழைத்தாலும்
இவர்கள்
வாழ்க்கை மட்டும்
இன்றும்
இருள் தான்…

கள்ளர்கள்
புல்லர்களும்
ஏமாற்றி
விளையாடுவது
ஏழையின்
மைதானம்…

எதிர்பார்;த்து
எதிர்பார்த்து
ஏமாறுவது
பொருளுக்கல்ல
ஓரு வேளை
உணவிற்கு…

கந்தலான ஆடையும்
கசங்கிப் போன
வாழ்க்கையும்
பழகிப்போன
பழக்கம்…

இவர்கள்
ஏழைகள் தான்
ஆனால்
கோழைகள் அல்ல…

நம்பி வாழ்கிறார்கள்
எங்கள் சிரிப்பில்
இறைவன் இருப்பதாய்…

இவர்களுக்கு
சேரவேண்டிய
சொத்து
நம் பத்தில்
பத்திரமாக…

மனைகளாய்
மாடிகளாய்
வங்கிகளில்
வட்டிகளாய்
வளமான வளர்ச்சியில்…

இவர்கள் நம்மிடம்
பிச்சை கேட்கவில்லை
அவர்களுக்குரிய
வரிகளை கேட்கிறார்கள்…

ஆம்
ஜகாத்-எனும்
ஏழை வரியை
நீதமாய் தந்தாலே
நீங்கிவிடும்
ஏழைப்பிணி…!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக