புதன், செப்டம்பர் 24, 2008

29.ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை…

ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை…

மதங்களை மறந்து
மனிதர்களை
நேசிக்க கற்றுத்தரும்
மகத்துவமிக்க
அவை இது …

கல்லூரிக்கு சென்றாலும்
கிடைத்திடாத
ஏக இறையறிவை
கனிவாய் போதிக்கும்
சபை இது …

முட்களாய்
வீதியில் வளர்ந்த சிலர்
ரோஜா மொட்டுகளாய்
மலர்கிறார்கள் …

கற்களாய் கரைகளில்
கிடந்த சிலர்
இங்கு வைரங்களாய்
ஜொலிக்கிறார்கள்…

ஆம்
இவர்கள்
மனித நேயத்தை
சுவாசிப்பவர்கள்
இங்கு
சுடலைமணி நாடாரும்
சுல்தான் அப்துல் காதிரும்
ஒன்று தான்…

இவர்கள்
மதங்களைக் காரணங்காட்டி
தங்களுக்குள்
பேதச் சுவரை
எழுப்புவதில்லை.
அதை
இடித்துக் கொண்டிருக்கிறார்கள்…
ஆம்
இவர்கள்
மதமற்ற மதமாகிய
மெய்ஞானத்தை
சுவைப்பவர்கள்…

இவர்கள்
ஞானம் கற்பது
ஞானி ஆவதற்கல்ல
மனிதனாக வாழ்வதற்கு…

தனையறியும்
உயர் மெய்ஞானத்தை
பயிர் செய்தால்
அயோத்தியில்
மட்டுமல்ல
அகிலமனைத்திலும்
அமைதி விளையும் …

3 கருத்துகள்:

  1. Fantasitic poem. Really appreciated. I wish Kiliyanoor Ismath to get more and more blessings from our Holiness to grow further perception in writing more and more poems in the future.
    -Adam A. Abdul Kuthoos, Madukkur.

    பதிலளிநீக்கு
  2. ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை… மதமா..? suppu

    பதிலளிநீக்கு
  3. மதம் பிடித்தவர்களின் பார்வையில் அப்படி தோன்றலாம்....

    பதிலளிநீக்கு